"இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம்"

கோவை : இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கோவை ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் சித்ரா மனோகர் தெரிவித்துள்ளார்.

கோவை : இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கோவை ரோட்டரி கிளப் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் சித்ரா மனோகர் தெரிவித்துள்ளார். 



கோவை ரோட்டரி கிளப்பின் சார்பில் நடந்த 'ஏஸ் ஐ எவால்வ்' (As I Evolve) என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்யவைதிய பார்மஸியின் நிர்வாக இயக்குநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், கோவை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் என். சுந்தரவடிவேலு சிறப்பிக்கப்பட்டார். நிகழ்ச்சியில், கொண்டாஸ் ஆட்டோமெஷனின் நிர்வாக இயக்குநர் எஸ். சஞ்சய் கலந்து கொண்டு உரையாற்றினர். 



இதைத் தொடர்ந்து, கோவை ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் என். சுந்தரவடிவேலு பேசுகையில், " 'ஏஸ் ஐ எவால்வ்' திட்டமானது இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக இளைஞர்களின் சக்திகளை கொண்ட நமது நாட்டிற்கு முக்கியமானது பற்றி இத்திட்டம் எடுத்துரைக்கிறது," என்றார். 



மேலும், இத்திட்டத்தின் தலைவர் சித்ரா மனோகர் கூறுகையில், " இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மதிப்புமிக்க அமைப்புடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மனிதஆற்றல் தேவைப்படுகிறது," எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...